கிருஷ்ணகிரி அருகே பூசாரிப்பட்டி பகுதியில், பர்கூர் ஒன்றியத்துக்குட்பட்ட 13 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் படே தலாவ் ஏரிக்கால்வாய், சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் தொடங்கின. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் ஆகியோர் இந்தப் பணிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.