கிருஷ்ணகிரி நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, 2-ம் கட்டமாக ரூ. 49 கோடியே 86 இலட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். உடன், நகராட்சி நிர்வாக இயக்குநர் சு. சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, பேரூராட்சிகள் துறை இயக்குநர் கிரண் குரால, நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் தே. மதியழகன், ஒசூர் ஒய். பிரகாஷ், தளிடி. ராமச்சந்திரன் நகரமன்ற தலைவர் பரிதாநவாப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.