கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6 இலட்சத்து 45 ஆயிரத்து 059 மதிப்பில் மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் மற்றும் தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.