தேன்கனிக்கோட்டை: கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

76பார்த்தது
தேன்கனிக்கோட்டை: கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை அடுத்த தொட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாளப்பா (60) கூலித்தொழிலாளியாகவும், இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் அன்று அவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

இதுகுறித்து அவருடைய மனைவி கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பெருமாளப்பா தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி