கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே கொத்தகுறுகையைச் சேர்ந்த ஹரி (16) என்ற மாணவர், வீட்டில் செல்போனில் கேம் விளையாடியபோது பெற்றோரிடம் கண்டிப்புக்கு உள்ளானார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.