கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராக்கி பரால் (24) என்பவர், மவு பாலா (19) என்பவருடன் பாரந்தூர்-கெலமங்கலம் சாலையில் நடந்து சென்றபோது, வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.