கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாம்பல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் இன்று காலை ஊத்தங்கரை நோக்கிச் சென்ற ஒரு அரசுப் பேருந்தும், உத்தகரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.