கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் மஹாலில் திமுகவின் தேர்தல்
முடிவுகள் குறித்த கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் மாநில மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கிருஷ்ணகிரி
திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலின்
முடிவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.