கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கோர்ட் அருகே ஆண் உடல் கிடந்ததையடுத்து ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பூபதி என்பதும், அவர் மதுபோதையில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.