ஊத்தங்கரை: கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

50பார்த்தது
ஊத்தங்கரை: கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை தர்மராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (40) கட்டிட தொழிலாளி. அவருக்கு உடல் நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணம் அடையவில்லை. 

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜீவ்காந்தி உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி