தமிழக பட்ஜெட் 2025-2026 மானிய கோரிக்கையில் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பர்கூர் பேரூராட்சிக்கு கீழ்க்கண்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தியது, பேரூராட்சிக்கு புதிய பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சந்தை மேம்பாடு, குடிநீர் திட்டம் மற்றும் சாலை வசதிகள் ஏற்படுத்திட அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், துறை அமைச்சர் நேரு அவர்களுக்கும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பர்கூர் பேரூராட்சித் தலைவர் சந்தோஷ் குமார் நன்றி தெரிவித்தார்.