கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் தனியாா் நிறுவன காவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்படும் போது உயிா்களையும், உடைமைகளையும் பாதுகாப்பது குறித்து இந்த பயிற்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலையை அலுவலா் ராமமூா்த்தி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.