மகராஜகடை: எருது விடும் விழா நடத்திய 3 பேர் மீது வழக்கு.

0பார்த்தது
மகராஜகடை: எருது விடும் விழா நடத்திய 3 பேர் மீது வழக்கு.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே கொட்டூர் கிராமத்தில் அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில், கொட்டூரைச் சேர்ந்த அருண்குமார் (38) மற்றும் மேலும் இருவர் என மொத்தம் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி