கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஜாவித் உசேன் (27), நேற்று முன்தினம் தடத்தரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி போலீசார், உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.