கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே, நில அளவையர் கௌதமன், விவசாயி கோபியிடம் 83 சென்ட் நிலத்தை பிரித்துக்கொடுக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோபி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள், இராயக்கோட்டை பகுதியில் இரசாயனம் தடவிய பணத்தைப் பெற்றுக்கொண்டபோது கௌதமனை கைது செய்தனர்.