KYC அப்டேட் மோசடி.. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

56பார்த்தது
KYC அப்டேட் மோசடி.. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
வங்கி மோசடிகளை தவிர்க்க சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், “சமீப காலமாக வங்கிகளிலிருந்து KYC தகவல்கள் புதுப்பிக்க வேண்டும். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சைபர் குற்றவாளிகள் தங்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வங்கிகளுக்கு நேரில் சென்று KYC-ஐ புதுப்பித்துக்கொள்ளுங்கள். மோசடியால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணிலோ, cybercrime.gov.in என்ற இணையதளப் பக்கத்திலோ புகார் அளிக்கவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி