தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "அன்புமணி வேண்டுமானால் புதிய கட்சியை தொடங்கிக் கொள்ளட்டும். அதில் அவரது ஆதரவாளர்களை சேர்த்துக் கொள்ளட்டும். பாமகவில் உள்ளவர்கள் மீது ஏதாவது தாக்குதல் நடந்தால், அதற்கு அன்புமணியும், அவரது மனைவியுமே காரணம். ஐயா என என்னை அன்போடு அழைத்தவர்கள் எல்லாம் என்னை திட்டி பேசுகிறார்கள்" என கூறினார்.