LGBTQ வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

79பார்த்தது
LGBTQ வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
LGBTQIA PLUS சமூகத்தினர் மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கான வரைவு கொள்கைகளை வரும் 17ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில், கொள்கை இறுதி வடிவம் பெறும் நிலையில் உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலை பெற்ற பின் அறிவிக்கப்படும் என அரசு தரப்பு வாதமிட்டது. இந்நிலையில், இரு பிரிவினருக்கும் ஒரே கொள்கையை வகுப்பதில் என்ன சிக்கல் உள்ளது என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி