மதுரை அருகே கோவில் பாப்பாக்குடி சோணை கருப்பணசாமி கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற எருது கட்டு விழாவில், புது விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி கருப்பு (29) என்பவர் மாடு குத்தியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று (பிப். 9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.