மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டிச் செல்வி (19) என்ற பி.காம் மாணவி, வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நிலக்கோட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பயின்று வந்த இவரின் மரணம் குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.