மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரத்தைச் சேர்ந்த பூவலிங்கம் (37) என்பவர் மதுரையில் தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திண்டுக்கல்-மதுரை சாலையில் பரவை கண்மாய் அருகே எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்ரவரி 26) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.