மதுரை: மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி

5பார்த்தது
மதுரை: மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி
மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களாவில் டீக்கடை நடத்தி வந்த சோமசுந்தரம் என்பவரின் கடையில், இன்று அதிகாலை (டிச. 3) சீரியல் பல்பில் இருந்து மின்சாரம் தாக்கியதில் டீ மாஸ்டர் பாலகுரு (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற உரிமையாளர் மகன் ரஞ்சித் குமார் (35) மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் உயிரிழந்தார். வாடிப்பட்டி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி