திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புகையிலைப்பட்டியில் நேற்று (பிப். 11) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அலங்காநல்லூரைச் சேர்ந்த பாலகுரு (எ) நீதி (26) என்ற வாலிபர் காளையை அடக்க முயன்றபோது கழுத்தில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.