மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே நேதாஜி சிலை முன்பாக இன்று (மே. 15) மாலை மாநகர் மாவட்ட
காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் நல்லமணி தலைமையில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிபிஐ இயக்குனர்
பதவி நீடிப்பு மற்றும்
நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசுகளை தேர்வு நடத்த அனுமதி மறுக்கும் மத்திய
பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னாள் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான
காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.