தமிழகத்தில் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி பலமுறை போராடியும் தீர்வு எட்டப்படாததால், மருந்து வணிகர்கள் சங்கம் நாளை (மே. 20) ஒரு நாள் கடையடைப்பு
போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையினரைக் காக்க வலியுறுத்தி,
சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சங்கம் தெரிவித்துள்ளது.