மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இரு முதியவர்களை, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் டிஜிபி அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாக லக்னோவில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று கூறி மிரட்டி பணம் பறித்த மர்ம நபர் மீது கடந்த 15ம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.