மதுரையில் 'யு-டர்ன்' விபத்துகளை அதிகரிப்பு: இருவர் பலி

0பார்த்தது
மதுரை குரு தியேட்டர் அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல்துறை அறிமுகப்படுத்திய 'யு-டர்ன்' முறை விபத்துகளை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இருவேறு விபத்துகளில் இருவர் பலியாகினர். முன்பு இருந்த சிக்னல் முறையில் எவ்வித விபத்துகளும் இன்றி போக்குவரத்து சீராக இருந்தது. தற்போது பெரிய வாகனங்கள் எளிதில் திரும்ப முடியாமல் திணறுவதால், எதிரே வரும் வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மக்கள் நலன் கருதி, ஆபத்தான புதிய நடைமுறையை கைவிட்டு, பழைய சிக்னல் முறையையே மீண்டும் அமல்படுத்த மதுரை மாநகர் காவல்துறை முன்வர வேண்டும்.