கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள குடலகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான இன்று (மே 31) காலை திருத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா, கோபாலா' என முழக்கமிட்டபடி தேரினை வடம் பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு பெரும் கோலாகலமாக நடைபெற்றது.
