மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.