மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், தேர்தல் காலங்களில் கோடநாடு கொலை வழக்கு குறித்து பேசி வருகிறார்கள். கோடநாடு கொலை வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தனது பிள்ளை போல் வளர்த்த ஜெயலலிதாவுக்கு டிடிவி தினகரன்
துரோகம் இழைத்துவிட்டார். இபிஎஸ் பற்றி விமர்சனம் செய்வதை டிடிவி தினகரன் நிறுத்தி கொள்ள வேண்டும். டிடிவி பேசுவதை நாங்கள் வாயை பொத்தி வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றார்.