மதுரை செல்லூர் பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன்(47) மதுபோதையில் வீட்டிற்கு வந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.