பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 10 இல் ஏலம்

4பார்த்தது
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மார்ச் 10 இல் ஏலம்
மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. கே. அர்வின் தலைமையில் வருகிற 10-ஆம் தேதி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரம் முன் பணம் செலுத்தி, 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி