மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டி கோவில் திருவிழாவில் சாமி கும்பிடச் சென்ற தூய்மைப் பணியாளர் புஷ்பம் (50) மற்றும் அவரது பேத்தி தேஜாஸ்ரீ (4) ஆகியோர் நேற்று (பிப். 20) இரவு சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொட்டாம்பட்டி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.