மதுரை மேலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான நீதிமன்ற கட்டிடத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதால், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் பயனளிக்கவில்லை. இதனால், இன்று (பிப். 18) சென்னை - திருச்சி நான்கு வழி சாலை சூரக்குண்டு அருகே 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.