மதுரை தெப்பக்குளம் பகுதியில், தனியார் டிரைவிங் பள்ளி ஊழியரான மஞ்சுளாவிடம் ரூ.8 லட்சம் கடன் வாங்கிய கேசவன், பணம் கேட்டு தொல்லை செய்வதாகக் கூறி தோசை கல்லால் சரமாரியாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மஞ்சுளா தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்ததால் கேசவன் தப்பிச் சென்றார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.