பொய்கரைப்பட்டியில் பசுமை நடைபயணம் அறிவிப்பு

68பார்த்தது
பொய்கரைப்பட்டியில் பசுமை நடைபயணம் அறிவிப்பு
மதுரையில் மாதந்தோறும் ஆங்கில மாதத்தில் முதல் ஞாயிறன்று பசுமை நடை பயணம் குழுவினர் மதுரையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான, புராதன இடங்களில் நடை பயணம் செய்து அப்பகுதிக்குரிய சிறப்புகளை அறிந்து கொள்ளும் வண்ணம் நடை பயண நிகழ்வுக்கு ஏற்பாடுகளை செய்வார்கள்.

அதன் அடிப்படையில் இந்த வாரம் சித்திரைத் திருவிழா போல் கொண்டாடப்படும் அழகர்கோயில் ஆடித்திருவிழா பற்றியும் மாசி மகத்துக்கு அழகர் வரும் பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் குறித்தும் ஆடிப்பதினெட்டாம் பெருக்கின் சிறப்பு என ஒரு பண்பாட்டு நோக்கில் இம்மாத பசுமை நடை. அதோடு தொல்லியல் தகவல்களும் அறியும் வகையில் இந்த பசுமை நடை பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு அழகர் கோவில் சாலை, கடச்சனேந்தல் அம்மன் காபி பார் அருகே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 97897 30105.

தொடர்புடைய செய்தி