மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலை சத்தியபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த பேனரை அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.