கள்ளிக்குடி அருகே உள்ள சிவரகோட்டை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள கண்மாய் நீர் நிலைகள் நிரம்பி வருவதால், தண்ணீர் தட்டுப்பாடு சரியாகும் என கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.