மதுரை திருமங்கலம் மறவன்குளம் ரயில்வே கேட் அருகே நேற்று (நவ. 14) காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடந்ததால், ரயில் மோதி இறந்தாரா அல்லது ரயில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.