மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (டிச. 3) மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. உயர்நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நிலையில், கோவில் நிர்வாகம் அதற்கு தடை கோரி மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனால் இன்று காலை திருப்பரங்குன்றத்தில் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.