மதுரை அருகே அவனியாபுரம் பெரிய சாமி நகரைச் சேர்ந்த சங்கர் (35) என்பவர், வெள்ளக்கல் சந்திப்பு அருகே நடந்த காதணி விழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி மகால் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சாலை வளைவில் நிலை தடுமாறி கம்பத்தில் மோதி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.