மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார் உண்டு பேருந்து நிறுத்தத்தில் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பயணிக்கும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தோப்பூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.