மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரங்கள் இல்லாததால் நோயாளிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதை அறிந்த ரோட்டரி சங்கத்தினர் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு டயாலிசிஸ் இயந்திரங்களை வழங்கியுள்ளனர். இன்று அவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.