மதுரையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு கட்சியின் தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஆணைக்கிணங்க, மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் நிதி உதவி வழங்கப்பட்டது.