உசிலம்பட்டி: கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

53பார்த்தது
உசிலம்பட்டி: கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல்பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள மேலபெருமாள்பட்டி கிராமத்திற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதாகவும், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் இந்த இரு கிராமத்திற்கும் வழங்குவதாகவும்,

 இதனை முன்னறிவிப்பின்றி திடீரென வழங்குவதால் வேலைக்கு செல்பவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுத்துவதாகவும், எனவே தங்களுக்கு மணல்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளாக அரசின் அதிகாரிகளுக்கு மனு அளித்து வந்த நிலையில் அதற்கு தீர்வு எட்டப்படாத காரணத்தால் நேற்று (டிச. 26) மணல்பட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விக்கிரமங்கலம் உசிலம்பட்டி சாலையில் மணல்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியலால் பொதுமக்கள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மறியலில் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜென்சி சுப்பிரமணியனும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி