விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்தபோது, பலத்த காற்று காரணமாக ஒருவர் இன்னொருவர் மீது மோதியதால், பாராசூட் விமான இறக்கையில் சிக்கியது. இதனால் அந்த அந்த நபர் 15 ஆயிரம் அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கினார். பின்னர் பாராசூட் உதவியுடன் லேசான காயங்களுடன் தரையை வந்தடைந்தார். இதுகுறித்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.