16 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 36 வயது நபருக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து திருவனந்தபுரம் சிறப்பு விரைவு நீதிமன்றம் இன்று (மார்ச் 03) உத்தரவிட்டுள்ளது. DNA சோதனைக்காக 16 வயது சிறுமியிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஆண் விந்தணுக்களை சேகரித்து பரிசோதித்தபோது உண்மை தெரியவந்தது. திருவல்லத்தைச் சேர்ந்த ஷைன் (37) என்பவருக்கு போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. ஷைன் திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.