அமெரிக்காவின் அயோவா மாகாணம் மஸ்கடின் நகரில், ரையன் வில்லிஸ் மெக்பார்லண்ட் (52) என்ற நபர் குடும்பத் தகராறு காரணமாகத் தனது உறவினர்கள் 6 பேரை 3 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸார் தன்னைச் சுற்றி வளைத்ததை அடுத்து, அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.