பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை இன்று (ஏப்.8) பிற்பகல் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மனு முறைப்படி பதிவு செய்யப்பட்டு எண்ணிடப்பட்டால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், சின்னம் தொடர்பான இந்த சட்டப் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.