இயக்குநர் ராஜுமுருகனின் 'மை லார்ட்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மாரிசெல்வராஜ் பாராட்டியுள்ளார். சென்னையில் நேற்று (பிப்., 07) நடைபெற்ற 'மை லார்ட்' திரைப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பேசிய மாரி செல்வராஜ், 'மை லார்ட்' திரைப்படம் ஒரு எளிய மனிதன் அனைத்தையும் இழந்த பிறகு அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன என்ற கேள்வியை ஆழமாக முன்வைக்கிறது, ராஜுமுருகன் தமிழ் சினிமாவுக்கு கடமைப்பட்டவர்' என்று கூறினார்.